நாம் கவனிக்கப்படுகிறோம் என்று உணர்ந்தால் மனிதர்கள் பொறுப்புடன் வாழ்வர்.
மெக்காவிலும் , சிங்கப்பூரிலும் குற்றங்கள் குறையவும் .....
டெல்லியில் கற்பழிப்புகள் அதிகரிக்கவும் ......
இதுதான் காரணம்.
இணையத்தில் உள்ள அறிஞர்கள் மூன்று வகைப்படுவர்
(௧) பொறுப்புடன் காலத்தை பயன்படுத்துபவர்
(௨) பொழுதுபோக்கிற்காக வந்து செல்பவர்கள்
(௩) கிடைப்பதை சுருட்டி வேறு உலகில் வெளியிட்டு வாழ்பவர்கள்
கொஞ்சம் கொஞ்சமாக (௨) மற்றும் (௩) ஆகிய பகுதிகளில் உள்ள நண்பர்களை (௧) பகுதியின்கீழ் அழைத்து வர வேண்டும்.
அரைத்த மாவையே அரைப்பதை அறிஞர்கள் நிருத்த வைக்க வேண்டும்.
அதிக அளவில் மாணவர்களை ,இளைஞர்களை தெளிவான தமிழ் இணையத்தின் அருகில் வரவைக்க வேண்டும்.
ஒரு பெரிய கூட்டம் செய்யவேண்டிய பனி இது.
ஆனால் தெளிவான சிந்தனையுடன் நான் ஒருவன் நினைத்தால் இத்தனையையும் என்னால் செய்துவிட முடியும்.
நான் ஒரு தனி மனிதன்
நான் தலைகீழாக நின்றாலும் - எதையும் மாற்றமுடியாது என்று நினைத்த காலம் உண்டு.
...அதுசரி
நான் ஏன் தலைகீழாக நிற்க வேண்டும் ?
நான் "நான் படித்த உளவியல் சித்தாந்தங்களை கையிலேந்தி நிற்பேன்"
அனைத்தும் மாறும்
மாற்றுவேன்
இப்படிக்கு
டாக்டர்.மு.செம்மல்
மெக்காவிலும் , சிங்கப்பூரிலும் குற்றங்கள் குறையவும் .....
டெல்லியில் கற்பழிப்புகள் அதிகரிக்கவும் ......
இதுதான் காரணம்.
இணையத்தில் உள்ள அறிஞர்கள் மூன்று வகைப்படுவர்
(௧) பொறுப்புடன் காலத்தை பயன்படுத்துபவர்
(௨) பொழுதுபோக்கிற்காக வந்து செல்பவர்கள்
(௩) கிடைப்பதை சுருட்டி வேறு உலகில் வெளியிட்டு வாழ்பவர்கள்
கொஞ்சம் கொஞ்சமாக (௨) மற்றும் (௩) ஆகிய பகுதிகளில் உள்ள நண்பர்களை (௧) பகுதியின்கீழ் அழைத்து வர வேண்டும்.
அரைத்த மாவையே அரைப்பதை அறிஞர்கள் நிருத்த வைக்க வேண்டும்.
அதிக அளவில் மாணவர்களை ,இளைஞர்களை தெளிவான தமிழ் இணையத்தின் அருகில் வரவைக்க வேண்டும்.
ஒரு பெரிய கூட்டம் செய்யவேண்டிய பனி இது.
ஆனால் தெளிவான சிந்தனையுடன் நான் ஒருவன் நினைத்தால் இத்தனையையும் என்னால் செய்துவிட முடியும்.
நான் ஒரு தனி மனிதன்
நான் தலைகீழாக நின்றாலும் - எதையும் மாற்றமுடியாது என்று நினைத்த காலம் உண்டு.
...அதுசரி
நான் ஏன் தலைகீழாக நிற்க வேண்டும் ?
நான் "நான் படித்த உளவியல் சித்தாந்தங்களை கையிலேந்தி நிற்பேன்"
அனைத்தும் மாறும்
மாற்றுவேன்
இப்படிக்கு
டாக்டர்.மு.செம்மல்
படித்ததில் பிடித்தது
ReplyDeleteஅந்த நாட்கள் மீண்டும் வந்திடாதோ ?
• தனிப் படுக்கையில் அல்ல அம்மா அப்பா கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்.
• எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.
• கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.
• புத்தகங்களை சுமக்கும் பொதிமாடுகளாக இருந்ததிலலை.
• சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.
• பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.
• நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.
• தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.
• ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.
• அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.
• காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.
• சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.
• உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள் நாங்கள்.
• எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்
• எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல
• அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.
• உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை
• எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.
• எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்.
• வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.
• எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர்.
• உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை
• நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.
• இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.
• இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்.
சொகுசும் ஆடம்பரமும் வாழ்க்கையைத் திருடி விடுவது உண்மை
ReplyDelete